தமிழர் அரசியலை பலப்படுத்த புத்திஜீவிகளே முன்வாருங்கள்: பொதுமக்களே பங்காளிகள் ஆகுங்கள்- விக்னேஸ்வரன் அழைப்பு (ஆதவன்)
இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம் எனவும் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.