திருகோணமலையை நேசித்தால் போட்டியில் இருந்துஒதுங்கி உங்கள் தம்பிரூபனுக்கு வழிவிடுங்கள்: சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையைநேசிப்பவராக இருந்துஅதனைபாதுகாக்கவிரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்துஒதுங்கிதுடிப்பும்,ஆற்றலும்,அறிவும் கொண்டதனதுதம்பிரூபனுக்குவழிவிடவேண்டும் என்றுதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாணமுன்னாள் முதலமைச்சருமானநீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ரூபன் ஒருவீரத் தமிழன்.தன்மானத் தமிழன். ஆகையினால்,ரூபனுக்குநீங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் தோற்கமாட்டீர்கள். மாறாகநீங்கள் வெல்வீர்கள். திருகோணமலைமக்கள் வெல்வார்கள். ஆகவே,நீங்கள் அவ்வாறுசெய்தால்,வரலாறுஉங்களைபுகழும். திருகோணமலைமக்கள் உங்களைபோற்றுவார்கள். திருக்கோணேஸ்வரபெருமான் உங்களைஆசீர்வதிப்பார்.”என்றுநீதியரசர் இன்றுசனிக்கிழமைவெளியிட்டுள்ளவிசேடஅறிக்கைஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,எனதுஅன்புக்குரியதிருகோணமலைமக்களே,
கடந்த இரண்டுவாரங்களில் இரண்டுமுறைதிருகோணமலைக்குவந்துஉங்களைசந்தித்திருந்தேன். கடந்த 29 ஆம் திகதியும் அங்குவந்துஉங்களைசந்திப்பதாகத்தான் இருந்தது. ஆனால்,தவிர்க்கமுடியாதகாரணங்களினால் என்னால் அங்குவரமுடியவில்லை. அதனால், இந்தஅறிக்கை மூலம் உங்களிடம்ஒருவேண்டுகோள் விடுக்கின்றேன்.
நடைபெறும் இந்ததேர்தல் கிழக்குமாகாணமக்களைபொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. இந்ததேர்தலைநீங்கள் சரியாகபயன்படுத்ததவறினால் அடுத்தபாராளுமன்றதேர்தல் நடைபெறும்போதுநாம் எமதுநிலம் அடையாளம் ஆகியவற்றைஎல்லாம் இழந்துஅரசியல் அனாதைகள் போல் ஆகும் நிலையில் இருப்போம். இதனைநான் மிகைப்படுத்தி கூறவில்லை. உண்மைநிலை இதுதான்.
அம்பாறையையும்,திருகோணமலையையும் ஏறத்தாழமுழுமையாககபளீகரம் செய்துள்ளசிங்களபௌத்தபேரினவாதம்,இன்றுமட்டக்களப்பைமுழுவதுமாகவிழுங்குவதற்குதிட்டங்களைவகுத்துள்ளது. தொல்பொருள் அடையாளம் இட்ட இடங்களாக 164 இடங்கள் ஆரம்பத்தில் குறிக்கப்பட்டிருந்தநிலையில் இன்றுஅவை 600 இடங்களாகஅதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல,திருகோணமலையில் எஞ்சியுள்ளதமிழர் நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்யும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. உதாரணமாக,புல்மோட்டையில் தென்னைமரவடிமற்றும்குச்சவெளியில் ஏறாமடுஆகிய இடங்களில் சிங்களகுடியேற்றங்கள் நிறுவப்படுகின்றன. இவ்வாறுமேலும் பல இடங்களில் சிங்களகுடியேற்றங்கள் அண்மைக் காலப்பகுதியில் துரிதமாகமுன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 1827 ஆம் ஆண்டுஒட்டுமொத்ததிருகோணமலையிலும் 18,000 (81சதவீதம்) தமிழ் மக்கள் வாழ்ந்தபோது 250 க்கும் குறைவானசிங்களமக்களேவாழ்ந்ததாகபுள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இன்றுஏறத்தாழசிங்களவர்களின் எண்ணிக்கையும் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் ஒரேஅளவு. முஸ்லிம்களின் எண்ணிக்கைஎம்மைவிடஅதிகம். இன்னும் ஓரிருவருடங்களில் நாம் சிறுபான்மையினர்ஆவோம்.
காலம்காலமாகநாம் பிதிர்கடன்களைநிறைவேற்றிவந்தகன்னியா வெந்நீரூற்றைசிங்களபௌத்தபேரினவாதம் இன்றுஆக்கிரமித்துள்ளது. எமதுபுகழ்பெற்றகோணஸ்வரர் ஆலயம் முன்னர் கோகன்னவிகாரையாக இருந்ததாகபுதியஒருகதையைதற்போதுஅவிழ்த்துவிட்டுள்ளனர். இது கோணேஸ்வரர் ஆலயத்தில் கைவைக்கும் அவர்களின் எண்ணத்தைக்காட்டுகின்றது.
இன்றுஎமக்கு இந்தநிலைமைஏற்பட்டுள்ளமைக்குகாரணம் கடந்த 10 வருடங்களில் சரியானஒருஅரசியல் தலைமைத்துவம் எமக்கு இல்லாமல் போனமையேஆகும். 1977 ஆம் ஆண்டுதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலைமாவட்டத்தைபிரதிநிதித்துவப்படுத்திபாராளுமன்றம் சென்றமறுவருடம் திருகோணமலையின் மூன்றில் இரண்டுநிலப்பரப்பைசேருநுவரஎன்றபுதியபிரேதேசசபையாகஉருவாக்கிபிரித்தெடுத்தார்கள். சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிஅலுவலகத்தைஅலங்கரித்துக்கொண்டிருந்தபோதுகன்னியாவெந்நீரூற்றுஆக்கிரமிக்கப்பட்டுபுல்மோட்டையில் சிங்களகுடியேற்றம் நிறுவப்பட்டது.பெரும்பான்மைபலம் பெற்றிருந்தும் கிழக்குமாகாணசபைமுதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்குதாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.திருகோணமலையைபாதுகாப்பதற்குசம்பந்தன் எந்தவிதமானநடவடிக்கைகளையும் எடுக்கவில்லைஎன்பதேஉண்மையானது. 5 வருடங்களுக்குமுன்னர் பார்த்தபின்னர் தற்பொழுதுதான் சம்பந்தன் ஐயாவைத்தாம் காணுவதாகநான் கடந்தவாரம் அங்குசென்றபோதுபொதுமக்கள் என்னிடம் கூறினர். திருகோணமலைமாவட்டத்தில் தங்கி இருந்துஅந்தமக்களின் குறைகளைஅறிந்துஎங்கெல்லாம் அநீதி இடம்பெறுகின்றதோஅங்கெல்லாம் சென்றுஅவற்றைதீர்க்கும் விருப்பமும் ஆற்றலும் உள்ளஒருவரேதிருகோணமலைக்கு இப்பொழுதுதேவை.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மைவேட்பாளராகபோட்டியிடும் ரூபன் என்றுஅழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திராவேஅதற்குதகுதியானவர். அரசியலில் தனதுமுகவரியைதொலைத்துநின்றசம்பந்தனுக்குமீண்டும் முகவரியைபெற்றுக்கொடுத்ததுகூடரூபனே.தம்பிபிரபாகரனினால் சிறந்தஆளுமையும் நிர்வாகதிறனும் கொண்டவர் என்றுஅடையாளம் காணப்பட்டவர் ரூபன். பலபொறுப்புக்களைநிழல் அரசாங்கத்தில் வகித்துஅரசியல்,பொருளாதாரரீதியாகஅளப்பெரும் சேவைகளைஅவர் செய்துள்ளார்.
திருகோணமலைமக்களே!ரூபன் உங்களுக்காகஉயிரையும் துச்சமாகமதித்துபோராடியவர். உங்களுக்காகஉங்களோடுவாழ்ந்தவர். அவர் உங்களுக்குபுதியவரல்ல. அறிவாற்றல்,நிர்வாகத்திறன்தேசப்பற்று,எளிமை,துடிப்புபோன்றநற்பண்புகளும் பலதிறமைகளும் ஒருங்கேஅமைந்தவர். ரூபன் திருகோணமலையைபாதுகாப்பார். அவரைநீங்கள் நம்புங்கள். அவருக்குஒருசந்தர்ப்பம் கொடுங்கள். நீங்கள் ஏமாறமாட்டீர்கள். ரூபனைமிகப்பெரும் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்யுங்கள். “இனியொருவிதிசெய்வோம். அதைஎந்நாளும் காப்போம்”என்றபாரதியின் வரிகளுக்குசெயல்வடிவம் கொடுக்கமுன் வாருங்கள்.
இறுதியாகசம்பந்தன் அவர்களுக்குநான் ஒருவேண்டுகோளைவிடுக்கவிரும்புகின்றேன். தயவுசெய்துகடந்தகாலத்தில் நீங்கள் விட்டதவறுகளைஉணர்ந்துஉங்களுக்குமீண்டும் அரசியல் முகவரியைபெற்றுக்கொடுத்தஉங்கள் தம்பிரூபனுக்குவழிவிடுங்கள். உங்களால் செய்யமுடியாதவற்றைஉங்கள் தம்பிசெய்வார். தமிழ் மக்களின் தலைநகரமும் எங்கள் பூர்வீகபூமியுமானதிருகோணமலைபாதுகாக்கப்படவேண்டும் என்றுநீங்கள் விரும்புவீர்களாயின் போட்டியில் இருந்துஒதுங்கிரூபனுக்குசந்தர்ப்பம் கொடுங்கள். உங்களுக்குநன்றாகதெரியும் உங்களைவிடவும் திருகோணமலையைபாதுகாப்பதற்குரூபன் தான் பொருத்தமானவர் என்பது. ரூபன் ஒருவீரத் தமிழன்.தன் மானத் தமிழன். ஆகையினால்,ரூபனுக்குநீங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் தோற்கமாட்டீர்கள். மாறாகநீங்கள் வெல்வீர்கள். திருகோணமலைமக்கள் வெல்வார்கள். ஆகவே,நீங்கள் அவ்வாறுசெய்தால்,வரலாறுஉங்களைப்புகழும். திருகோணமலைமக்கள் உங்களைப்போற்றுவார்கள். திருக்கோணேஸ்வரபெருமான் உங்களைஆசீர்வதிப்பார்.
நான் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்குகாரணமாக இருந்தவர் நீங்கள் தான் என்பதைநான் மறக்கவில்லை. உங்கள் மீதுஎன்றும் எனக்குமரியாதைஉண்டு. ஆனால், இந்தநாட்டில் தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களின் உரிமைகளையும் முதன்மைப்படுத்திஉங்களைஎதிர்த்துஅரசியல் செய்யும் ஒருநிலைமையினைகாலம் எனக்குவகுத்திருக்கிறது. என் கடமைகளில் இருந்துசரியமாட்டேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்,வடமாகாணம்
செயலாளர் நாயகம்,தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர்,தமிழ் மக்கள் பேரவை
தலைவர்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி