திருமலை காளி அம்மன் ஆலயத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் வழிபாடு
திருகோணமலைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருக்கோணாமலை காளி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். திருகோணமலை மாவட்டதில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரூபன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.