• June 23, 2020
  • TMK Media

தேர்தல் செலவுகளுக்காக நீதியரசரிடம் 1 லட்சம் ரூபா நன்கொடை அளித்த இணுவில் முதியவர்

தேர்தல் செலவுகளுக்கு நிதி உதவி செய்யுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப் பற்றாளன் திரு மகாலிங்கம் அவர்கள் தனது சிறிய சேமிப்பில் இருந்து ரூபா ஒருலட்சத்து ஓராயிரத்தை நீதியரசரின் இல்லம் தேடி வந்து இன்று செய்வாய்க்கிழமை காலை கையளித்தார்.

முதியவரின் இந்த உதவி மக்களுக்கான தனது அரசியல் செயற்பாடுகளின் பொறுப்பு கூறலை மிகவும் ஆழமான முறையில் உணர்த்தியுள்ளதாக விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார். மிகவும் பொறுப்பான முறையில் இந்த பணம் செலவிடப்படும் என்றும் அவரது எதிர்பார்ப்புக்கள் வீண்போகாது என்றும் மகாலிங்கம் அவர்களுக்கு தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.

மகாலிங்கம் அவர்களின் இந்த செயல் விக்னேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் இருந்தவர்களின் கண்களை பனிக்கச்செய்தது.