• May 18, 2020
  • TMK Media

வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மே18 நினைவும் மரநடுகையும்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆளுக்கு ஒரு மரம் நடும் திட்டத்தை முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் ,மே 18 மாலை வல்வெட்டித்துறையில் நடத்தினார்.

வல்வெட்டித்துறையில் வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடு, மரநடுகை, மற்றும் மரங்கள் பகிர்ந்தளித்தல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.